search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைப்படகு மீனவர்கள்"

    • காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
    • ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் அங்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ராமேசுவரம்:

    இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினா். அப்போது இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 151 தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.

    இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதில் ஏராளமான மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 8-வது நாளை எட்டி உள்ளது.

    இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 8-வது நாளாக நேற்று மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே நேற்று மாலையில் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் அங்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து எம்.எல்.ஏ.வின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்ட மீனவர்கள், கடந்த 2 நாள் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதேபோல் இன்று(திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் நடத்தி அதன்பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது என விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    • இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்.
    • விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் இருந்து வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை மன்னர்வளைகுடா மற்றும் கச்சத்தீவு பகுதிகளில் எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதும், தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் எல்லைதாண்டி கைது செய்யப்படும் மீனவர்களுக்கு தண்டனை வழங்கிடும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் அரசுடமையாக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதனை கண்டித்து இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட 10 படகுகளை மீட்க அரசு ஒப்பபுதல் அளிக்க வேண்டும். விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேதமடைந்த படகுகளுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்குவது போல மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் அருகே ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தை இன்று காலை தொடங்கினர்.

    இதில் மாவட்ட மீனவ சங்கத்தலைவர் ஜேசுராஜா தலைமை வகித்தார். மீனவ சங்கத்தலைவர் சகாயம், எமரிட், ஆல்வீன், தெட்சிண மூர்த்தி, சமுதாய தலைவர் சாம்சன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    உண்ணாவிரதத்தில் மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

    • சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
    • மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்திலும் படகுகளில் கறுப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மீனவர்களை விடுவிக்க இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

    ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய-மாநில அரசுகள் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மீனவ சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

    மீனவ சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பிடிக்கப்பட்ட படகுகளையும் மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட கலெக்டர் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, மீனவர்களின் நடைபயண போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    எனினும், திட்டமிட்டபடி கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாகவும் மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரத்தில் 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதில் 2 படகு ஓட்டுநர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் வழங்கியது. இதனை கண்டித்து இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்திலும் படகுகளில் கறுப்பு கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கச்சத்தீவு, புனித அந்தோணியார் ஆலய திருவிழா புறக்கணிப்பு போராட்டத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.

    இதையொட்டி இன்று காலை ஏராளமான மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ராமேசுவரத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டனர். மத்திய-மாநில அரசுகள் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அந்தப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துணை சூப்பிரண்டு உமாதேவி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீனவர்களின் பேரணி காரணமாக ராமேசுவரம், ராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அறந்தாங்கி:

    ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 23 பேர் மற்றும் அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறை பிடித்துச் சென்றனர்.

    அதனை தொடர்ந்து 23 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய மாநில அரசுகளின் பரிந்துரையால் 21 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, படகை இயக்கிய ஓட்டுனருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அதில் 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

    இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்திருப்பதைக் கண்டித்தும், அதனை திரும்பப்பெற வேண்டும் எனவும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ராமநாதபுரத்தில் மீனவர்கள் நாளை தங்களது ரேசன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் பிடிக்கச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்புவார்கள்.
    • கடந்த 7 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நகர் லாஞ்சியடி, சோழியக்குடி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன் பிடிக்கச் சென்று ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் கரை திரும்புவார்கள்.

    அப்போது விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் பிடித்து வரும் இறால், நண்டு, கனவாய் போன்ற கடல் உணவுப்பொருட்களை தூத்துக்குடி பகுதியிலிருந்து வந்து கடல் உணவுப்பொருட்களை பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.

    நெல்லை, தூத்துக்குடி பகுதியில் வெள்ளத்தினால் அப்பகுதியில் சாலை, மின்சாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டதோடு, மின்சாரம் இல்லாததால் கடல் உணவுப்பொருட்களை குளிர்படுத்தும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 7 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்தநிலையில், தற்போது பெரிய நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் நிலையும் இல்லாததால், மழை விட்டும் இப்பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தொண்டி வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் 4.4 மில்லி மீட்டர் என்ற அளவில் குறைந்த அளவு மழை பொழிவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.
    • இறால், புல்லன், கிளிமீன்கள், செம்மீன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    குளச்சல் :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் தென் தமிழக கடல் பகுதிகள், மன்னர் வளைகுடா மற்றும் அதனையொட்டிய கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்தப் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் நேற்று ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கரை திரும்பிய விசைப்படகுகள், மீண்டும் மீன் பிடிக்க செல்லவில்லை. அவை குளச்சல் மீன் பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. இன்று காலை முதல் குளச்சல் பகுதியில் மழை பெய்து வருவதால் குறைவான வள்ளம், கட்டுமரங்களே மீன் பிடிக்க கடலுக்கு சென்றன. பெரும்பாலான விசைப்படகுகள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால் குளச்சலில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று வந்தால் தான் கேரை, கணவாய், இறால், புல்லன், கிளிமீன்கள், செம்மீன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குமரி மேற்கு கடற்கரையில் தடைக்காலம் நிறைவடைகிறது
    • 60 நாட்களாக மேற்கு மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    மீன்கள் இனப்பெருக்கத்திற்காக குமரி மாவட்ட கடல் பகுதியில் ஆண்டுக்கு 2 முறை மின்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந்தேதிமுதல் ஜூன் 15-ந்தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

    இந்த காலங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். அதன்படி மேற்கு கடற்கரை பகுதியில் விதிக்கப்படடிருந்த தடை இன்று நள்ளிரவுடன் முடிகிறது. கடந்த 60 நாட்களாக மேற்கு மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் இன்றுடன் தடை நீங்குவதால் அவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். கடலுக்கு செல்வதற்கு தங்களின் படகுகளை பழுதுநீக்கி, புதுப்பித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். அவர்கள் நள்ளிரவுக்கு பிறகு கடலுக்கு செல்ல உள்ளனர்.

    குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு களுக்கு உதவி பங்குத்தந்தை ஷாஜன் பிரார்த்தனை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் செய்திருந்தது.

    குளச்சல் மீன் பிடித்துறை முகத்தில் விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலில் வடநாட்டு தொழிலாளர்கள் ஏராள மானோர் ஈடுபட்டு உள்ளனர். 60 நாட்கள் தடையையொட்டி, அவர்கள் தங்களின் ஊருக்கு சென்றிருந்தனர்.

    இன்று நள்ளிரவு முதல் தடை நீங்குவதால் தங்களின் சொந்த ஊருக்கு சென்றி ருந்த வடமாநில தொழி லாளர்கள் கடந்த 3 நாட்க ளாக குளச்சல் திரும்பிய வண்ணம் இருந்தனர்.

    • கன்னியாகுமரியில் சூறாவளி காற்று வீசியது
    • மீன்கள் அதிகமாக இல்லாததால் வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள் ளது. இந்த துறை முகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கன்னியா குமரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கடுமையான சூறாவளி காற்று வீசி வரு கிறது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்படு கிறது. மேலும் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி மாற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சின்ன முட்டம் துறை முகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த விசைப்பட குகள் அனைத்தும் சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதைத்தொ டர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மின் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது. இதே போல ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் சூறாவளி காற்று காரணமாக பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த கடற்கரை கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சூறைக்காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. இதற்கி டையில் சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் கடுமையான குளிர்காற்று வீசுகிறது.

    இதேபோல் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1000-க்கணக்கான பைபர் வள்ளங்கள் உள்ளன. குளச்சல் மீன்பிடித் துறை முகத்தை தங்கு தளமாக கொண்டு மீன் பிடித்து வருகிறார்கள். விசைப்படகுகள் மீன் பிடி தடைக்காலமாக உள்ளதால் மீன்பிடிக்க செல்லாமல் மீன் பிடித்துறை முகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    வானிலை எச்சரிக்கை காரணமாக குளச்சல் சுற்று வட்டார பகுதியில் உள்ள பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீன்பிடிக்க செல்ல வில்லை. மேலும் மேடான பகுதியில் வள்ளங்களை மீனவர்கள் நிறுத்தி வைத் துள்ளனர். காற்று அதிகமாக காணப்படுவதால் குறைந்த அளவு மீனவர்களே மீன் பிடிக்க சென்றதால் மீன்கள் வரத்து குறைந்தது. மீன்கள் அதிகமாக இல்லாததால் வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது
    • 61 நாட்களுக்கு பிறகு களைகட்டும் துறைமுகம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. அந்தக் காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடல் சென்று மீன் பிடிக்க தடைக்காலமாகும். அதன்படி இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி (இன்று) வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப் பட்டது. தடைக்காலம் முடிவடைவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரை யேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட னர்.

    மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி னார்கள். கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதை தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

    இதையடுத்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கினார்கள். அந்தப் படகுகளில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பும் பணி இன்று நடைபெற்றது. மேலும் விசைப்படகுகளில் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை ஏற்றும் பணியும் நடந்தது. சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன் பிடிக்கச் செல்ல தயாராக நிற்கும் விசைப்படகுகளில் டீசல் நிரப்பிவருகிறார்கள்.

    மேலும் படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களைப் பதப்படுத்தி வைத்து கொண்டு வருவதற்காக ஐஸ் கட்டிகளை நிரப்பி வருகிறார்கள். இதனால் துறைமுகம் களைகட்டி காணப்படுகிறது.

    நாளை (15-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. நாளை ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

    நாளை அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் இந்த விசைப்படகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். அப்போது சீலா, வஞ்சிரம், நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொழுவை, நெடுவா, திருக்கை, நவரை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இவற்றை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இன்றே சின்னமுட்டம் துறைமுகம் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    • மீன்பிடி தடைகாலம் முடிந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
    • காசிமேடு மார்க்கெட் முழுவதும் மக்கள கூட்டமாக காணப்பட்டது.

    ராயபுரம்:

    தமிழகத்தில் ஏப்ரல் 15-ந்தேதி முதல் கடந்த 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. தடைகாலம் முடிந்து 15-ந் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் 1200 விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    தடைகாலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 100 விசைப்படகு மீனவர்கள் அதிகாலையில் கரை திரும்பினர்.

    பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் அதிகாலை முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் மீன் ஏலம் விடும் பகுதியில் அதிக அளவில் குவிந்தனர். இதனால் காசிமேடு மார்க்கெட் முழுவதும் மக்கள கூட்டமாக காணப்பட்டது.

    ஆனால் எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. சிறியவகை நெத்திலி, சங்கரா, காரப்பொடி உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு குவிந்து இருந்தது.

    ஆனாலும் மீன் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த வாரம் விலையே இன்றும் இருந்தது. வஞ்சிரம் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் எதுவும் விற்பனைக்கு வராததால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனினும் அவர்கள் சிறிய அளவிலான மீன்களை ஆர்வத்துடன் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். வஞ்சிரம்- ரூ.1400, வவ்வாள்- ரூ. 1100,சங்கரா ரூ.400 முதல்ரூ.800 வரை விற்கப்பட்டது.

    மீனபிடி தடைகாலம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு மொத்த வியாபாரிகள் மீன் ஏலக்கூடத்தில் வந்து மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காசிமேடு பகுதி மீண்டும் மீன் விற்பனையில் களை கட்டி இருந்தது.

    வழக்கமாக ஆழ்கடலில் விசைப்படகில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் குறைந்தது 10 முதல் 15 நாட்கள் வரை கடலில் தங்கி மீன்பிடித்து கரைக்கு திரும்புவது வழக்கம்.

    எனவே அடுத்த வாரம் அதிக அளவிலான விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பும் போது பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மீன்விலை குறையும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.வரும் நாட்களில் கரை திரும்பினால் மீன்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, விசைப்படகு மீனவர்கள் குறைந்தது 2 வாரம் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குறைந்த அளவு விசைப்படகு மீனவர்கள் கரைக்குதிரும்பி உள்ளனர். சிறியவகை மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்திருந்தது. பெரியவகை மீன்கள் அதிகம் வரவில்லை. இதனால் மீன்விலையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அடுத்த வாரம் ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பும்போது பெரிய மீன்கள் விற்பனைக்கு வரும். அப்போது மீன்விலை குறையும் என்றார்.

    ×